நேர்மையை பார்த்து மலர்ந்த காதல் - ஆட்டோ டிரைவரை மணந்த பெல்ஜியம் பெண் - கோயிலில் டும் டும் டும்!

x

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்நாடக மாநிலம் விஜயநகரை சேர்ந்த ஆனந்தராஜு என்ற இளைஞரை இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார். ஆனந்தராஜு என்பவர், ஹம்பி பகுதியில் ஆட்டோ டிரைவராகவும், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சமூக சேவகரான கெமில் எனும் பெண், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் ஹம்பிக்கு சுற்றுலா வந்திருந்தார். அப்போது ஆனந்தராஜு அவர்களுக்கு உதவி செய்தார். இதனால் கெமிலுக்கும் ஆனந்தராஜுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனந்த ராஜனின் நேர்மையை பார்த்து கெமில் அவரை காதலிக்க தொடங்கியுள்ளனர். இதன் பின் இரு வீட்டாரும் பேசி, கெமிலுக்கும் ஆனந்தராஜுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் இவர்களின் காதல் திருமணத்திற்கு கொரோனா தொற்று தடையாக இருந்தது. இந்நிலையில், 4 வருடங்களாக காதலித்து வந்த இருவருக்கும் ஹம்பி கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்