மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: தெலுங்கானா முதல்வர் மகளிடம் சிபிஐ விசாரணை

மதுபான கொள்கை முறைகேடு புகாரில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் மகளிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
x

ராஷ்டிரிய அமிதி ஆட்சி நடந்து வரும் தெலுங்கானாவில், முதலமைச்சர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா மேல்சபை உறுப்பினராக இருக்கிறார். இந்த நிலையில், டெல்லியின் மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கைதான தொழிலதிபர் அமித் அரோராவுடன், கவிதா பலமுறை செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 6ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கவிதாவுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், விசாரணைக்கு கவிதா ஆஜராகவில்லை. இந்த நிலையில், ஐதரபாத் விரைந்த சிபிஐ அதிகாரிகள் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் கவிதாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்