பாலியல் தொல்லை தந்த இன்ஸ்பெக்டர்.. போலீஸ் வேலைக்கே ஆப்பு வைத்த பெண் போலீஸ்

x
  • பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் ஆய்வாளர் வீரகாந்தியை நிரந்தரமாக காவல் பணியில் இருந்து விடுவித்து திண்டுக்கல் சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் வீரகாந்தி.
  • இவர் கடந்த 2021ம் ஆண்டு சக பெண் காவலர் ஒருவருக்கு, பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது
  • . இதுகுறித்து பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
  • இதனிடையே வீரகாந்தியின் செல்போன் உரையாடல் உள்ளிட்டவற்றை வைத்து விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டு உண்மை என உறுதியானது
  • . இதன்பேரில் அறிக்கையையும் விசாகா குழு தாக்கல் செய்த சூழலில் வீரகாந்தியை காவல் பணியில் இருந்து நிரந்தரமாக விடுவித்து திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ்குமார் உத்தரவிட்டார்.
  • வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் ஆய்வாளர் மீதான இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்