"உயிரிழந்த ஜமேஷா முபினை யாரோ இயக்கியுள்ளனர்" - சந்தேகிக்கும் ஜவாஹிருல்லா

கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா மூபினை இயக்கியவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என தம‌முக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
x

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில பொது குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவராக பேராசிரியர் ஜவாஹிருல்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்றாமல் தமிழக காவல்துறையே விசாரித்திருந்தால் பல உண்மைகள் வெளி வந்திருக்கும் என்றார். அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் யாருக்கோ லாபம் இருப்பதாகவும், அவர்கள் தான் ஜமிஷா மூபினை இயக்கி உள்ளதாகவும் தெரிவித்த ஜவாஹிருல்லா, அது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றும், எந்த முஸ்லீமும் இதை செய்திருக்க மாட்டார் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்