சென்னை நோக்கி வந்த கொல்லம் எக்ஸ்பிரசுக்கு நேரவிருந்த விபரீதம்.. செங்கோட்டையில் அதிர்ச்சி

x

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த கொல்லம் - எழும்பூர் விரைவு ரயில் பெட்டியில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கேரள மாநிலம், கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு செல்லும் விரைவு ரயிலானது செங்கோட்டை ரயில் நிலையம் வந்த‌து. அங்கு வழக்கம்போல், ரயில்வே ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, எஸ்3 பெட்டியில் சக்கரத்திற்கு அருகே மிகப்பெரிய அளவில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற உயர் அதிகாரிகள், எஸ்3 பெட்டியை அப்புறப்படுத்தி, அதில் இருந்த பயணிகளை எஸ்2 பெட்டிக்கு அனுப்பினர். அவர்களுக்கு மதுரைக்கு சென்றதும் வேறு எஸ்3 பெட்டி இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அரை மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. விரிசல் இருந்த‌தை முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்