"எங்களை கருணைக் கொலை செய்யுங்கள்" - கலெக்டர் ஆபீஸில் கதறிய குடும்பம்

x

கந்து வட்டி கொடுமை தாங்கவில்லை என கூறி தங்களை கருணை கொலை செய்து விடுமாறு ஒரு குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


திண்டுக்கல் விருவீடு பகுதியைச் சேர்ந்த வேல்முருகனுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். சுய தொழில் செய்ய இவர் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த பரமேசுவரியிடம் 4 வட்டி பேசி 3 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார்... முதல் மாதம் வட்டி கட்ட சென்ற போது, 4 வட்டி இல்லை எனவும் 10 வட்டிக்குத் தான் கடன் கொடுத்ததாகவும் பரமேசுவரி கூறியதாகத் தெரிகிறது... அதன்பிறகு வேல்முருகனிடம் இருந்து இதுவரை 11 லட்ச ரூபாய் வட்டி மட்டுமே வாங்கியுள்ளதாகவும், தொடர்ந்து வீட்டிற்கு வந்து மிரட்டி பத்திரங்களை எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது... மேலும் ஆபாசமாக பேசியும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 வருடங்களில் 3 முறை தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் தன் மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் குடும்பத்தை கருணைக் கொலை செய்து விடுமாறு அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்