மூதாட்டியை பலிகொண்ட அதிவேக கார்... மர்மமான முறையில் திடீரென பற்றியெரிந்த பரபரப்பு சம்பவம் | Karur

x

கரூர் அருகே மூதாட்டியை இடித்துத் தள்ளி பலி கொண்ட கார், சிறிது நேரத்தில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ், மாம்பாறை முனியப்பன் கோயிலுக்கு சென்று விட்டு குடிபோதையில் காரை இயக்கியதாக கூறப்படுகிறது.

அரவக்குறிச்சி சாலையில் வந்து கொண்டிருந்த போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த 72 வயது மூதாட்டி

அருங்க்காயம்மாள் மீது அதிவேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் அதே இடத்தில் நின்று கொண்டிருந்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென அந்த கார் மர்மமான முறையில் தீப்பிடித்து எரியத் துவங்கியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் விபத்தை ஏற்படுத்திய கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

மூதாட்டியை பலி கொண்ட கார் மர்மமான முறையில் தீப்பிடித்து கருகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்