3 ஆண்டுகளாக பேச மறுத்த அம்மா... பேசவைக்க மகள் செய்த விபரீத காரியம்... தாயின் வார்த்தைகளை கேட்காமலேயே உயிர்விட்ட மகள்...

x

காரைக்காலில், மூன்று ஆண்டுகளாக பேசாமல் இருந்த தாயை பேச வைக்க, விஷம் அருந்திய பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாதாகோயில் வீதியைச் சேர்ந்த முத்துமாரி என்பவருக்கும், அவரது தாயார் அமுதாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லையென கூறப்படுகிறது. தனது தாயாரின் மனநிலையை மாற்றி தன்னிடம் பேச வேண்டும் என்பதற்காக, முத்துமாரி விஷம் அருந்திய நிலையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்