முறையா வாடகை செலுத்தியவர்களுக்கு...வீட்டிற்கே சென்று பாராட்டு...

x

கோயில் நிலத்தில் வீடு கட்டிக்கொண்டு, வாடகையை நிலுவை இன்றி செலுத்தியவர்களின் வீடுகளுக்கு, மேல தாளங்கள் முழங்க சென்று அறநிலையத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

காஞ்சிபுரத்தில்உள்ள கச்சபேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார் பாளையம் பகுதியில் இடம் உள்ளது.

இந்த இடத்தில் குடியிருப்போர் நிலுவைத்தொகை இல்லாமல், வாடகை செலுத்துவதாக கூறப்படுகிறது. அவர்களின் வீடுகளுக்கு மேள, தாளம் முழங்க சென்ற அதிகாரிகள், சால்வை அணிவித்து, கோவில் பிரசாதம் வழங்கி கவுரவ படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்