7 முறை சாக முயன்றும் தப்பிய நபர்.. 8வது முறையில் பரிதாப உயிரிழப்பு - 'விளையாட்டு' என நினைத்து பறிகொடுத்த குடும்பத்தினர்

x
  • தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, குடும்பத்தகராறில் 7 முறை தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த நபர், 8வது முறையாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
  • கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மதுபோதையில் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த காளிமுத்து, ஆத்திரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
  • அப்படி, இதுவரை 7 முறை தற்கொலைக்கு முயன்றும், ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார்.
  • மீண்டும் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்த நிலையில், மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து விட்டதாக காளிமுத்து கூறியுள்ளார்
  • . ஆனால், அவரது குடும்பத்தினர், இதுவும் வழக்கம்போல ஒன்றுதான் என நினைத்து அப்படியே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால், காளிமுத்துவை, குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
  • அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
  • இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்