வாகனங்களிலிருந்து திடீர் திடீரென மாயமாகும் பெட்ரோல்.... மர்மத்தை உடைத்த சிசிடிவி

தென்காசி கடையநல்லூரில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிய இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
x

தென்காசி கடையநல்லூரில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிய இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடையநல்லூர் அல்லி மூப்பன் தெருவில், வாகனங்களில் இருந்து தொடர்ந்து பெட்ரோல் திருடப்பட்டு வந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அப்பகுதி மக்கள், இரவு நேரத்தில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடுவதை கண்டறிந்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் சிசிடிவி காட்சியின் உதவியோடு தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்