திமுக மாவட்ட செயலாளரின் முன்னாலேயே மாறி மாறி அடித்துக்கொண்ட திமுகவின

x

திமுக மாவட்ட செயலாளரின் முன்னாலேயே மாறி மாறி அடித்துக்கொண்ட திமுகவினர்

தென்காசி அருகே மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவினர் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன், கடையநல்லூரில்,

கட்சியின் மூத்த முன்னோடி பிச்சைகனி என்பவருக்கு பொற்கிழி பரிசளிக்க வருகை தந்தார். இவரை வரவேற்க பேனர் வைப்பது தொடர்பாக, கடையநல்லூர் முன்னாள் நகர செயலாளரான சேக் உதுமான் என்பவருக்கும், தற்போதைய நகர செயலாளராக இருக்கும் அப்பாஸ் என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சேக் உதுமான் இரண்டு இடத்தில் பேனர் வைத்திருந்தார். இந்த இரண்டு பேனரும் கிழிக்கப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட செயலாளரான சிவ பத்மநாதன் பொற்கிழி பரிசு வழங்கிய பின்னர் அங்கிருந்து செல்ல முற்பட்டார். அப்போது அவருக்கு முன்பே இரு தரப்பினை சேர்ந்தவர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்கிக்கொண்டனர். அப்போது மாவட்ட செயலாளர் உடனடியாக அங்கிருந்து காரில் கிளம்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்