குஜராத் மாநிலத்தில் இருந்து மீண்டும் ஜெய்சங்கர் போட்டி

x

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஜெய்சங்கரின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட காந்தி நகரில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்