"மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்கும் வரை""இது நீதிக்கான போராட்டம்"

x

மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்கும் வரை, தனது போராட்டம் தொடரும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார். மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டார். அவருடன் இணைந்து ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், மல்யுத்த வீரர்கள் தங்களின் போராட்டத்தை தொடர வேண்டும் என்றும், இது நீதி, சுதந்திரம் மற்றும் வாழ்க்கைக்கான போராட்டம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்