முகமூடி அணிந்து தெருவில் இருந்தவர்களை ஜாதி பெயர் சொல்லி கண்மூடித்தனமாக தாக்குதல்... இரவில் பயங்கரம்

x

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே, தெருவில் நடமாடிய மக்களை மர்மகும்பல் ஒன்று, ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சித்தையகோட்டை என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், இரவில் முகமூடி அணிந்து வந்த அந்த கும்பல், தெருவில் நடமாடிய ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலரையும் ஜாதி பெயரைச் சொல்லி பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

அங்கிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இந்த தாக்குதலில் பலர் காயமடைந்த நிலையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், அதுபற்றிய விசாரணையை தொடங்கி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்