இந்தியன் வங்கியில் தீ விபத்து - தீயில் கருகிய ஆவணங்கள்,நகைகள்

x

இந்தியன் வங்கியில் தீ விபத்து - தீயில் கருகிய ஆவணங்கள்,நகைகள்

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகின. திருவள்ளூர் மாவட்டம், பஜார் வீதியில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஊழியர்கள் வழக்கம் போல் வங்கியை பூட்டி விட்டு சென்ற நிலையில், இன்று காலை 5 மணியளவில் அப்பகுதி வழியாக சென்ற மக்கள், வங்கியிலிருந்து கரும்புகை வந்ததையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மின் கசிவினால் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வாடிக்கையாளர்கள் நகை அடகு வைத்த விவரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தீயில் கருகியதாக தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்