🔴LIVE : நந்தனத்தில் மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் - முதல்வர் , மத்திய அமைச்சர் திறந்து வைப்பு

x

இடம்: நந்தனம்.

நந்தனத்தில் சென்னை மெட்ரோ ரயில் தலைமை அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புர விவலாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் திறந்து வைக்கின்றனர் அதன் நேரடி காட்சிகளை காணலாம்.

தற்போது கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனை வளாகத்தில் இயங்கி வரும் தலைமை அலுவலகம், இன்று முதல் நந்தனத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் இயங்கும்.

3.90லட்சம் சதுர அடியில் 365 கோடி ரூபாய் செலவில் 12 அடுக்கு கட்டிடமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

12 மாடி கட்டிடத்தில் 6 மாடி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கும் மீதமுள்ள 6 மாடிகள் அரசு மற்றும் தனியார் நிறுவங்களுக்கு வாடகை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே வளாகத்தில் மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கான குடியிருப்புகளும் அமைய உள்ளது


Next Story

மேலும் செய்திகள்