வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி.. லட்ச கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் - திருச்சியில் பரபரப்பு

x
  • வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் மோசடி செய்த விவகாரத்தில், தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • தனியார் MS கன்சல்டன்சி நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி மற்றும் அதன் மேலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர், தமிழ்நாடு மற்றும் ஆந்திரவைச் சேர்ந்த 8 பட்டதாரி இளைஞர்களுக்கு, போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக் கூறி 18 லட்சம் பெற்றுள்ளனர்.
  • ஆனால், கூறியபடி வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்ததால், பாதிக்கப்பட்டவர்கள், ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
  • இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், மோசடியில் ஈடுபட்ட மீனாட்சி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • இதுதொடர்பாக மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாட்டில் வாங்கித் தருவதாகக் கூறி, தனியார் கன்சல்டன்சி நிறுவனம் சுமார் 70 பேரிடம் பணத்தை பெற்று ஏமாற்றி இருப்பது அம்பலமாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்