அடுத்த 24 மணி நேரத்தில்.. 19 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்

x

அடுத்த 24 மணி நேரத்திற்கு காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது...

நீலகிரி, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல், இலங்கை கடலோரம், தென்மேற்கு தென்கிழக்கு வங்கக் கடலிலும், லட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரத்திலும் நாளை ஆந்திர கடலோரம், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், தமிழக கடலோரத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்