"குழந்தைகள் நல மருத்துவமனையில்...""தினமும் காசு கொடுத்து.."கொந்தளிக்கும் நோயாளிகள்..

x

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குடிக்க குடிநீர் கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தினசரி நிறைய நோயாளிகள், பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் குடிநீர் தொட்டியும் சுகாதாரமற்ற முறையில் குப்பையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போதிய நீர் வசதி இல்லாததால் கழிவறைகளில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கவலை தெரிவிக்கும் பொதுமக்கள், தினசரி வெளியே காசு கொடுத்து பாட்டில் குடிநீரை வாங்கி வருவதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்