பயணிகளுக்கு சென்னை விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி சுற்றி பார்ப்பதால் மேம்பாலம் பாதை 25 நிமிடங்கள் மூடப்படும் என விமான நிலைய ஆணையகம் அறிவித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இரண்டாயிரத்து 467 கோடி ரூபாய் செலவில், புதிய ஒருங்கிணைந்த கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். முன்னதாக பிரதமர் மோடி புதிய முனையத்தை சுற்றி பார்க்கிறார். இதனால் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு புறப்பாடு முனையங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு மேம்பாலத்தில் செல்ல பகல் 2.50 மணியில் இருந்து பகல் 3.15 வரை தடை விதிக்கப்படுகிறது.

இந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு செல்ல திட்டமிட்ட பயணிகள் முன்கூட்டியே சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்