மனைவியுடன் தகாத உறவு - நன்பனை கொன்று NH-ல் வீசிய கொடூரம்

x

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வேன் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மனைவியுடன் தொடர்பில் இருந்த நண்பனை போலீசார் கைது செய்தனர் புஞ்சை புளியம்பட்டி சாணார்பதி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து, கல்யாணி தம்பதிக்கு திருமணமாகி 13 வயதில் காருண்யா என்ற மகள் உள்ளார். மாரிமுத்து தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், அவரது மனைவி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மாரிமுத்துவின் நண்பர் மோகனுக்கும், கல்யாணிக்கும், இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. தனது கணவர் குடித்துவிட்டு, தன்னை அடிப்பதாக மோகனிடம் கல்யாணி தெரிவித்துள்ளார். இதனிடையே, மது போதையில் இருந்த மோகன், மாரிமுத்துவை இரும்பு ராடால் அடித்து கொலை செய்து விட்டு, சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வாய்க்காலில் வீசி சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்