"உங்க கடைக்கு ரெய்டுக்கு வந்திருக்கேன்..." - ரூ.500 வாங்கி கொண்டு ஓடிய தாத்தா

x

"உங்க கடைக்கு ரெய்டுக்கு வந்திருக்கேன்..." - ரூ.500 வாங்கி கொண்டு ஓடிய தாத்தா

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் சக்திவேல் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இக்கடைக்கு வந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்,

தான் உணவு பாதுகாப்புத்துறையில் இருந்து வருவதாகவும், பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்ததாக தெரிகிறது. பின்னர், கடை உரிமையாளரிடம் இருந்து 500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்ட அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது சம்பந்தமாக சக்திவேல் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் கேட்டபோது, தங்கள் சார்பாக யாரும் ஆய்வுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் உள்ள சிசிடி கேமராவில் பதிவான பதிவுகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்