79 வயது மாற்றுத்திறனாளி மனைவியை கொலை செய்த கணவர் - கடலில் தள்ளி விட்டதாக பகீர் தகவல்

ஜப்பானை சேர்ந்த 81 வயதான ஹிரோஷி புஜிவாரா என்ற முதியவர், இது தொடர்பான தனது கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டு சரண் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு கால்களை இழந்த தனது மனைவியை தொடர்ந்து கவனித்து வந்ததாகவும், தற்போது தானும் வயது முதிர்வால் சோர்வடைந்து விட்டதால் மனைவியை வீல் சேருடன் கடலில் தள்ளி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com