குடியிருப்பு பகுதியில் மனித எலும்புக்கூடு.. அதிரிச்சியில் உறைந்த கிராம மக்கள்..!
ஓசூர் ஜீவாநகர் குடியிருப்பு பகுதி அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது
. காடு போன்று காணப்படும் அந்த இடத்தில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில், அங்கு சென்ற போலீசார் மனித எலும்புக்கூட்டை கைப்பற்றினர்.
விசாரணையில், பல மாதங்களாக அந்த எலும்புக்கூடு அப்பகுதியில் கிடந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீஸார் அந்த மனித எலும்புக்கூட்டை கைப்பற்றி, விசாரணைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story