அனல் பறக்கும் அரையிறுதி - பாகிஸ்தானுக்கு மீண்டும் லக் அடிக்குமா..?

x

அனல் பறக்கும் அரையிறுதி - பாகிஸ்தானுக்கு மீண்டும் லக் அடிக்குமா..?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. சிட்னியில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. போட்டி நடக்கும் சிட்டி மைதானம் பேட்டர்களுக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் சிட்னியில் இன்று ரன் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இரு அணியிலும் வலிமையான வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்தப் போட்டி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்