கடைக்கு சென்று விட்டு திரும்புவதற்குள் கார் கண்ணாடியை உடைத்து நகைகள் திருட்டு - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

ஓசூர் அருகே உள்ள சர்ஜாபுரத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணா, ஜலசாட்ஷி தம்பதி தங்கள் மகள் திருமணத்துக்கு வாங்கியிருந்த 730 கிராம் நகைகளை, வங்கி லாக்கரில் இருந்து காரில் எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். முத்தாநல்லூர் என்ற இடத்தில் காரை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்க இருவரும் கடைக்குச் சென்றனர். இவர்களை நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 4 பேர், காரின் கண்ணாடியை உடைத்து நகைப்பையை திருடிக் கொண்டு தப்பி விட்டனர். லட்சுமி நாராயணா தம்பதி திரும்பி வந்தபோது, நகைகள் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்து, சர்ஜாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த பாண்டுரங்கம், முத்தையா ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர். தலைமறைவாக இருக்கும் மேலும் இருவரை அவர்கள் தேடி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்