வீடு புகுந்து தாக்குதல்..! பாமக ஒன்றிய செயலாளரின் மனைவி உயிரிழப்பு.. ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு

x

ஸ்ரீவைகுண்டத்தில் பாமக ஒன்றிய செயலாளரின் மனைவி உயிரிழந்த விவகாரத்தில் வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் - பொன்னம்மாள் தம்பதி. சுப்பிரமணியன் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த இசக்கி பாண்டி என்பவர், மதுபோதையில் பொன்னம்மாளிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் இசக்கி பாண்டியனை பொன்னம்மாள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இசக்கி பாண்டியனின் தந்தை மூக்கத்தேவர், தாய் பிச்சம்மாளும், முன்பகை காரணமாக, பொன்னம்மாள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த பொன்னம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொன்னம்மாள் கொலை வழக்கில் இசக்கிபாண்டியன், அவரது தந்தை மூக்கன், தாய் பிச்சம்மாள் ஆகிய மூவரையும் ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்