மணல் கடத்தல்காரர்களிடம் பணம் கேட்கும் தலைமை காவலர் - தீயாய் பரவும் ஆடியோ

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மணல் கொள்ளையர்களிடம் பணம் கேட்டு தலைமை காவலர் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.

ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாலாற்றில் இருந்து இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் கட்டவாரபல்லியை சேர்ந்த சீனிவாசன் என்பவர், மணல் கொள்ளையர்களிடம் பணம் கேட்டு பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. முறையாக பணம் கொடுக்கவில்லை என்றால், மணல் கடத்தி செல்லும் வழித்தடத்தை அதிகாரிகளிடம் தெரிவித்து விடுவதாக அவர் பேசிய ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்