மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானார்

x

மகாத்மா காந்தி - கஸ்தூரிபா தம்பதியருக்கு பிறந்த மகனான மணிலால் காந்திக்கு கடந்த 1934ம் ஆண்டு பிறந்தவர் அருண்காந்தி. மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள அவானி ஸன்ஸ்தா என்ற இடத்தில் தங்கியிருந்தார். சொந்த ஊருக்கு புறப்பட இருந்த நிலையில், அருண் காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் அவானி ஸன்ஸ்தாவுக்கு திரும்பினார். மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியிருந்த நிலையில், நேற்றிரவு நீண்ட நேரம் எழுதிக் கொண்டிருந்த அருண் காந்தி, இன்று காலை காலமானார். வாஷி நந்துவாலில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளதாக, அருண் காந்தியின் மகன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்