காமராஜர் பாணியில் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட ஆளுநர் தமிழிசை

x

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தினார். ஆளுநர் மாளிகையில், தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த சீராய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, கடந்த 1957-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர், சாத்தனூர் அணை திட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள்காட்டி, தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தினார். அதனை அதிகாரிகள் பின்பற்றுவதாகத் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்