“புகையிலை பொருட்கள் மீது அரசு தடை விதிப்பது நியாயமானது" - உயர்நீதிமன்றம் அதிரடி

x

தமிழகத்தில் ஹான்ஸ் வகை புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த‌து. அப்போது, அரசு தரப்பில் ஹான்ஸ் வகை புகையிலையில் 1 புள்ளி 8 சதவீதம் நிகோடின் கலந்திருப்பதாகவும், இது பொதுமக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும், அதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி, குடிமகனின் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளதால், புகையிலை பொருட்கள் மீது அரசு தடை விதிப்பது நியாயமானதுதான் என்றும், எனவே ஹான்ஸ்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்