திருச்சி விமான நிலையத்தில் சூட்கேசில் சூதானமாக கடத்தப்பட்ட தங்கம் | ரூ.35 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

x

திருச்சி விமான நிலையத்தில் சூட்கேசில் உள்ள கம்பியில் மறைத்து எடுத்துவரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணிகள் வந்திறங்கினர். அவர்களை பரிசோதித்ததில், சூட்கேசில் உள்ள கம்பியில் 629 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை எடுத்து வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்