"அரச மரக்கிளையில் அம்மன் கண்" - தீயாக பரவிய தகவல்.. திரண்டு சென்று வழிபடும் மக்கள்

x

துறையூர் அருகே அரச மரத்தில் அம்மன் கண் தெரிவதாக பரவும் தகவலால், பொதுமக்கள் திரண்டு மரத்தை வழிபட்டு வருகிறார்கள். திருச்சி மாவட்டம் பி.மேட்டூர் கிராமத்தில், அரசு மற்றும் வேம்பு மரங்களுக்கு கீழே விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தநிலையில் அங்குள்ள அரச மரக்கிளையில், அம்மனின் கண்கள் தெரிவதாக தகவல் பரவி வருகிறது. இதனையடுத்து பி.மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பொதுமக்கள் அரச மர பகுதிக்கு சென்று, கிளையில் கண் போன்று தெரியும் இடத்தை கண்டு வழிபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்