"மாமூல் கொடு, மஜாவா மணல் கடத்து.." - மணல் கடத்தலுக்கு கட்டிங் கேட்ட தாசில்தார்... ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் பணம் கேட்ட விவகாரத்தில், வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மணல் கொள்ளையில் ஈடுபடும் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த ராஜிவ் என்ற நபரிடம், வட்டாட்சியர் சம்பத் போன் மூலமாக பணம் கேட்கும் ஆடியோ 2 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்