"ரூ.500 கொடுங்க.. அப்போ தான் உடலை பிணவறையில் வைப்பேன்.." - லஞ்சம் கேட்ட மருத்துவ உதவி பணியாளர்

x

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பிணஅறையில் வைப்பதற்காக மருத்துவ உதவி பணியாளர் 500 ரூபாய் லஞ்சம் வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சைக்கு வந்த மனோகரன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை பிணவறையில் வைக்க மருத்துவ உதவி பணியாளர் இளையராஜா 500 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார்.

அதற்கு மனோகரனின் உறவினர்கள் ரசீது கேட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து வாங்கிய பணத்தை இளையராஜா திரும்பதர முற்பட்டபோது அதனை வாங்க மறுத்து மனோகரனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்