நடுக்கடலில் நடந்த பயங்கரம்... மீனுக்காக மீனவர்களுக்குள் Gang war - பரபரப்பு காட்சிகள்

x
  • விழுப்புரம் மாவட்டம் எக்கியர் குப்பத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்கள், விசைப்படகில் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
  • இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, புதுவை வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மற்றொரு விசைப்படகில் அங்கு வந்துள்ளனர்.
  • அப்போது எக்கியர் குப்பம் மீனவர்கள் அதிக அளவில் மீன்பிடித்ததால், வீராம்பட்டினம் மீனவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
  • தொடர்ந்து படகில் இருந்த, இரும்பு பைப்புகளைக் கொண்டு எக்கியர் குப்பம் மீனவர்களை அவர்கள் தாக்கி உள்ளனர்.
  • இந்த தாக்குதலில் எக்கியர் குப்பத்தைச் சேர்ந்த சந்துரு என்ற மீனவர் விரல் பகுதியில் காயம் அடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
  • சம்பவம் தொடர்பாக மரக்காணம் போலீசார் விசாரித்துவரும் நிலையில், தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்