நாகூர் தர்காவில் கந்தூரி விழா.. இஸ்லாமியர்களுடன் இந்துக்கள் கொண்டாட்டம் | Nagore Dharga

x

மேலநாகூரில் நடைபெற்ற கந்தூரி விழாவில் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திரளான இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம், மேலநாகூர் தர்காவில் வருடாந்திர கந்தூரி விழா நேற்று நடைபெற்றது. இதில் தாஹிரா இசையுடன் இசைத்து வந்த பக்கீர்மார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கொடியினையும், சந்தன குடத்தையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர், தர்காவில் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்துக்களும் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்