இறுதிச்சடங்கு செய்த குடும்பம்...2 ஆண்டுக்கு பின் உயிரோடு வந்த நபர் - அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்

x

மத்தியப்பிரதேசத்தில் கொரோனாவால் இறந்ததாக கருதப்பட்ட நபர், 2 ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்பியதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். தார் மாவட்டத்தில் வசித்து வந்த 35 வயதாகும் கமலேஷ் படிதார் என்பவர், மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். உடல் ஒப்படைக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பின்னர், கரோட்கலா கிராமத்தில் உள்ள தனது தாய்வழி அத்தையின் வீட்டிற்கு கமலேஷ் வந்ததால், அவர்கள் ஆச்சர்யமடைந்தனர். கமலேஷ் கடந்த 2 ஆண்டுகளாக எங்கே இருந்தார் என்பது குறித்து தகவல் இல்லை. அவர் அளிக்கும் தகவல் அடிப்படையில், அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்