முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்... ஆளுநர், முதலமைச்சர் இரங்கல்

x

மறைந்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவின் இறுதி சடங்கு, இன்று நடைபெறுகிறது.

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுமான நரேஷ் குப்தா, இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை காலமானார்.

இந்த நிலையில் நரேஷ் குப்தாவின் உடல் இன்று காலை 9 மணியளவில், மருத்துவமனையில் இருந்து சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்திற்கு எடுத்து வரப்படும் என அவரது மகன் மனிஷ் குப்தா தெரிவித்துள்ளார். மேலும் இன்று மாலை 3.00 மணி அளவில் வேலங்காடு இடுக்காட்டில் இறுதி சடங்குகள் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்