காவரி ஆற்றில் சடலமாக கிடந்த முன்னாள் BSNL ஊழியர்

x

ஈரோடு மாவட்டம் பவானி அருகே BSNL முன்னாள் ஊழியர் காவிரி ஆற்றில் சடலமாக மீட்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலகடகம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற BSNL ஊழியர் ரங்கசாமி. 60 வயதான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், பவானி அடுத்த ஊராட்சி கோட்டை காவிரி ஆற்றில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்சினயில் இருந்த முதியவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்