சென்னையில் முதல் வந்தே பாரத் ரயில்சேவை...நவ.11ல் ரயில்சேவையை பிரதமர் மோடி தொடக்கம்

x

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

இதுவரை 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில், 5-ஆவதாக சென்னை, மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்சேவை தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக இயக்கப்படும் இந்த ரயில் சேவையை, பிரதமர் மோடி வரும் 11 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது.

இந்த ரயில் மைசூரு சென்றுவிட்டு, மீண்டும் இன்றே சென்னை திரும்புகிறது.


Next Story

மேலும் செய்திகள்