கார் உதிரி பாகம் விற்பனை செய்யும் கடையில் தீ - ரூ. 2 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசம்

x

கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.

பெரம்பலூர் நான்கு ரோடு செல்லும் பகுதியில் இளையராஜா என்பவர் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை காலை 11.30 மணி அளவில் இக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்