"காந்தி, நேரு, பட்டேல் குறித்த பொய் தகவல்களை ஏற்க முடியாது"... சோனியா காந்தி கண்டனம்

x

சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், விடுதலை போராட்ட வீரர்களின் மிகச்சிறந்த தியாகங்கள் மற்றும் சாதனைகளை குறைக்க, மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். பொய் பிரச்சாரத்தின் மூலம் மகாத்மா காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், ஆசாத் போன்றோரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று பாஜக சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், 1947ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு நேரு தான் காரணம் என கூறப்பட்டிருந்தது. இதேபோன்று, இல்லம் தோறும் மூவர்ண கொடி பிரச்சாரம் குறித்த கர்நாடக அரசின் விளம்பரத்திலும், நேருவை சுதந்திர போராட்ட வீரர் என குறிப்பிடவில்லை. இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று மத்திய அரசை சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்