தகாத உறவால் உச்சக்கட்ட விபரீதம்.. முட்புதரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

x

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே, இளம்பெண் முட்புதரில் கொடூரமான கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

அணைக்கட்டு அருகே மேல் வாழைப்பந்தல் மலை கிராமத்தைச் சேர்ந்த மலர் என்பவர், மலைப்பகுதியில் உள்ள முட்புதரில் ரத்த வெள்ளத்தில் மிதந்து இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில், அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் திடுக்கிடும் தகவல் அளித்தார். ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்த மலருக்கும், சண்முகத்திற்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் சண்முகத்தின் மனைவிக்கு தெரியவரவே, மலரிடம் சண்டையிட்டுள்ளார். அதன் பிறகு, சண்முகத்திடம் பேச்சுவார்த்தை இல்லாமல் மலர் இருந்து வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சண்முகம், மலைப்பகுதியில் உள்ள முட்புதரில், மலரின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, சண்முகத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்