காலை சிற்றுண்டித்திட்டம் விரிவாக்கம் - அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

x

தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இந்த நிலையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில், திட்டத்தை செயல்படுத்தும் முறை, அனைவருக்கும் தரமான உணவை வழங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்து அறிவுரை வழங்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்