"இங்க விட்டா..என்னையும் வயித்துல வளர குழந்தையையும் கொன்னுடுவாங்க" - மனைவி அனுப்பிய மெசேஜ்...பதறிய கணவன்

x

ஈரோட்டில் காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாண பெண்ணை அவரது குடும்பத்தார் சமாதனம் பேசி அழைத்து சென்று தற்போது ஆணவக்கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுப்பதாக காதல் கணவர் போலீசில் புகாரளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணியின் போது சுகந்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மூன்று வருடமாக காதலித்து வந்த நிலையில், சுகந்தியின் பெற்றோர் அவருக்கு வேறோரு நபருடன் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர். இதனால், இருவரும் கடந்த ஜீலை மாதம் பழனியில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் ஓசூரில் தனியாக வசித்து வந்த நிலையில் சுகந்தி 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து, சுகந்தியின் பெற்றோர் இருவரிடமும் வந்து சமாதனம் பேசி, உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு விருந்து வைப்பதாக கூறி சுகந்தியை அழைத்து சென்றுள்ளனர். பின், சில நாட்கள் கழித்து தீபாவளி பண்டிகைக்காக சுகந்தியை அனுப்பி வைக்குமாறு ஹரிஹரன் அழைத்துள்ளார். அப்போது மறுத்ததோடு மட்டுமல்லாமல் கருவை கலைத்து ஆணவக்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், ஹரிஹரனின் சாதி பெயரை கூறி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஹரிஹரன் ஈரோடு மாவட்ட காவல் துறையில் தனது மனைவியின் வீட்டார்கள் மீது நடவடிக்கை எடுத்து, தனது மனைவியையும், குழந்தையையும் உயிருடன் மீட்டு தர கோரி மனு அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்