"அவர்கள் களப்பணியை முழுமையாக ஆற்றவேண்டும்"... "எதிர்த்து மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெற வேண்டும்" - சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்

x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை அறிமுகம் செய்து வைத்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய அவர், எதிர் அணியினர் களப்பணி முழுமையாக ஆற்றினாலும், தங்கள் கூட்டணி வெற்றிபெறும் எனத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்