ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 12 அமைச்சர்கள் உட்பட 32 பேர் கொண்ட குழுவை களமிறக்கிய திமுக..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 12 அமைச்சர்கள் உட்பட 32 பேர் கொண்ட குழுவை களமிறக்கிய திமுக..!
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, 12 அமைச்சர்கள் உள்பட 32 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை திமுக அமைத்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலுக்காக, கை சின்னத்தை ஆதரித்து, திமுக பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், தேர்தல் பணிக்குழுவை திமுக தலைமை நியமித்துள்ளது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்பட 32 பேர் இடம்பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்