மின்சாரம் தாக்கி பரிதாபமாக ஊழியர் உயிரிழப்பு..உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

x
  • நெல்லை அருகே மின்வாரியத்திற்கு பணியாற்றிய தினக் கூலி ஊழியர், பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  • நெல்லை டவுன் கோட்டையடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், அதிகாரிகள் முன்னிலையில் மின் கம்பத்தில் ஏறி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
  • அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், மணிகண்டன் கம்பத்தில் இருந்தவாறே பரிதாபமாக உயிரிழந்தார்.
  • தகவல் அறிந்து வந்த நெல்லை தீயணைப்பு படையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • இந்நிலையில், மணிகண்டன் இறப்புக்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக் கூறி, அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • உயிரிழந்த மணிகண்டனுக்கு மனைவியும், மகனும் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்